மேலும் செய்திகள்
மர்ம நபர்கள் நடமாட்டம் தப்பி ஓடியவர்களுக்கு வலை
14-Sep-2024
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 10வது வார்டு தொண்டிக்கரடு ரங்கசாமி பிள்ளை தெருவில், வீட்டின் வெளியே ஒரு டூவீலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த, 3 மர்ம நபர்கள், டூவீலரின் பூட்டை உடைத்து எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவர் சத்தம் போடவே, மர்ம நபர்கள் டூவீலரை அப்படியே போட்டுவிட்டு, தப்பி ஓடினர். இதுகுறித்த, 'சிசிடிவி' காட்சிகள் வாட்ஸாப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14-Sep-2024