பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சேந்தமங்கலம், ஆடி கடைசி வெள்ளியையொட்டி, காந்திபுரம் கருமாரியம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், ராமநாதபுரம் புதுார் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.பக்தர்கள் அனைவருக்கும் கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.