ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி சிலை தயாரிப்பு பணி விறுவிறு
குமாரபாளையம் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் ஆக., 27ல் கொண்டாடப்பட உள்ளது. அன்று, பெரிய, சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்துவர். தொடர்ந்து, 3, 5, 7 ஆகிய நாட்களுக்கு பின், கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சிலைகள், சிறிய அளவு முதல், பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jysc2tzm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து, சிலை வியாபாரி கார்த்திகேயன் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆண்டுதோறும் இறைவனுக்கு செய்யும் ஒரு சேவையாக எண்ணி, குலத்தொழிலாக எங்கள் குடும்பத்தினர் விநாயகர் சிலைகை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.அரை அடி முதல், 10 அடி வரையிலும் சிலைகளை விற்பனை செய்து வருகிறோம். இந்த சிலைகள் அரசு விதிப்படி, நீரில் எளிதில் கரையும் பொருட்களால் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எந்த ரசாயன கலவையும் இதில் பயன்படுத்தப்படவில்லை. மாசுக்கட்டுப்பாடு துறையின் அறிவுரைப்படி, ஜிகினா வேலைபாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளின் விற்பனை தீவிரமாக நடந்து வரும் நிலையில், புதிய சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.