உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 21 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள் ஏலம்

21 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய் கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த, மூன்று வாரமாக மஞ்சள் ஏலம் நடக்கவில்லை. இந்நிலையில், 21 நாட்களுக்கு பின், நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 14,359 ரூபாய், அதிகபட்சம், 16,399 ரூபாய், உருண்டை ரகம் குறைந்தபட்சம், 13,999 ரூபாய், அதிகபட்சம், 13,999 ரூபாய், பனங்காலி, 13,229 ரூபாயிலிருந்து, 28,899 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 42, உருண்டை, 6, பனங்காலி, 2 என, 50 மூட்டை மஞ்சள், நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் முடியும் சமயம் என்பதால், மஞ்சள் வரத்து குறைந்தே காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ