நேஷனல் பப்ளிக் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்
நாமக்கல், சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில், சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடந்த சிறப்பு யோகா பயிற்சிக்கு, பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல், மேல்நிலை வகுப்பு முதல்வர் விக்டர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர்கள், சூரிய நமஸ்காரம், ஏகபாதாசனம், திரிகோணாசனம், உட்பதாணாசனம், வஜ்ராசனம், யோக முத்ராசனம் போன்ற ஆசனங்களை செய்து யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். முன்னதாக அனைத்து மாணவ, மாணவியரும் யோகா உறுதிமொழி ஏற்றனர். திரளான மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.