வரும் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஊட்டி; ஊட்டியில் வரும், 21ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அந்த கோரிக்கைகளை, 7ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்: 72, ஊட்டி, 643001 என்ற அலுவலக முகவரிக்கு, தபாலிலோ, நேரடியாகவோ அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால், விவசாயம் சம்மந்தமான குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.