சாலையில் விழுந்த மரம் அகற்றிய தீயணைப்பு துறையினர்
குன்னுார், ; குன்னுார் சோலடா மட்டம் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில், குன்னுார் சோலடா மட்டம் சாலையில் கற்பூர மரம் விழுந்தது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், முன்னணி தீயணைப்பாளர் முரளி உட்பட தீயணைப்பு வீரர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், கிராமத்திற்கு இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.