உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

கூடலூர்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் கோவிலை சுற்றி வந்து, விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று, மாலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் முதுமலை துணை இயக்குநர் வித்யா தலைமையில் சிறப்பாக நடந்தது.விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில், பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானை கிருஷ்ணா மணி அடித்தபடி கோயிலை சுற்றி வந்து பூஜை செய்து விநாயகரை வணங்கியது. இந்நிகழ்வு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது.விழாவில், வனச்சரகர்கள் மேகலா, விஜய், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், வன ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ