டி.என்.பி.எஸ்.சி., குரூப்-–2 கட்டணமில்லா பயிற்சி
ஊட்டி: அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக குரூப்–2 கட்டணம் இல்லாத பயிற்சி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வாயிலாக, ‘குரூப்–2 ஏ’ சேவைக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திருக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும், தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்திலும், பந்தலுாரில் டியூஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் கூடுதல் பயிற்சி மையத்திலும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆர்வலர்கள், இப்பணி இடத்திற்கு விண்ணப்பித்த தற்கான ஆவணங்களுடன்,இவ்வலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்தோ, அல்லது 0423 2444004, 72000 19666 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.