மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்
28-Aug-2024
குன்னுார்;குன்னூரில் இந்த ஆண்டு 2.5 டன் அளவிலான ஜாதிக்காய்களில் ஊறுகாய் தயாரிக்கும் பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகேயுள்ள பழவியல் நிலையத்தில் ஜாம், ஜெல்லி, பழரசம், ஊறுகாய் தயார் செய்யப்படுகிறது. மருத்துவ குணம் வாய்ந்த ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. ஆண்டு தோறும் ஆக., செப்., மாதங்களில் ஜாதிக்காய் அதிக அளவில் விளையும் நிலையில், இந்த ஆண்டு 2.5 டன் அளவிலான ஜாதிக்காய்களில் ஊறுகாய் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
28-Aug-2024