உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 431 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 431 பேர் ஆப்சென்ட்

ஊட்டி; ஊட்டியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 431 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் சப்--கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உட்பட, 70 காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்--1 தேர்வு நேற்று, 'ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரீக்ஸ் பள்ளி,' என, 5 மையங்களில் நடந்தது. மாவட்டத்தில், 1,081 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில், 650 பேர் தேர்வு எழுதினர். 431 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை