மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
11 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
11 hour(s) ago
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 45. தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷனாக பணி புரிந்து வருகிறார். இவர் தனது மனைவி சரண்யா, 38 உடன் தேக்கம்பட்டி அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷ்குமார் திடீரென மயக்கம் வருவதாக கூறி இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் அவர் மயக்கம் அடைந்து வாகனத்துடன் கீழே விழுந்தார்.உடனே மனைவி சரண்யா அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.-----
11 hour(s) ago
11 hour(s) ago