உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொக்காபுரம் மாரியம்மன் கோவில்; புதிய அறங்காவலர்கள் நியமனம்

பொக்காபுரம் மாரியம்மன் கோவில்; புதிய அறங்காவலர்கள் நியமனம்

ஊட்டி; பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.ஊட்டி அருகே பிரசித்தி பெற்ற சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, ராமன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அறங்காவலர் குழு உறுப்பினர்களாக, தட்டை, ராஜூ, ராமன், பொன் ராமசந்திரன், சசிசாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !