உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முட்டைகோஸ் விலை ஏற்றம்; அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம்

முட்டைகோஸ் விலை ஏற்றம்; அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம்

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மாவட்டத்தில் நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில், தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான, கூக்கல்தொறை, கட்டபெட்டு, ஈளாடா, கதகுதொறை மற்றும் நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில், நடப்பாண்டு அதிக பரப்பில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டு, விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர்.தற்போது, பெரும்பாலான தோட்டங்களில் முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஒரு கிலோ முட்டைகோஸ், மேட்டுப்பாளையம் மண்டிகளில், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கோத்தகிரி, குன்னுார், மற்றும் ஊட்டி உள்ளூர் மார்க்கெட்டில், 30 முதல், 35 ரூபாய் வரை, தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது.இடு பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு, லாரி வாடகை மற்றும் மண்டிகமிஷன் உள்ளிட்ட செலவினங்கள், அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனினும், குறைந்த லாபம் கிடைத்தால் போதுமென வியாபாரிகளுக்கு மொத்தமாக விலை பேசி, விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை