உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை: மலைகளில் அருவி

பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை: மலைகளில் அருவி

பந்தலுார்; பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. குளிரான காலநிலை நிலவி வரும் நிலையில், மலைமுகடுகளில் புதிய அருவிகள் ஊற்றெடுக்க துவங்கி பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில், ஓவேலி மலைப்பகுதியில் சந்தனமலை செல்லும் சாலை ஓரம், முக்கூர்த்தி மலை முகடுகள், நிலம்பூர் வனப்பகுதி மலைகளில் அதிக அளவில் தண்ணீர் ஊற்றுகள் அதிகரித்து, வெள்ளி அருவிகளாக கொட்டி வருகிறது. உள்ளூர் மக்கள் இதனை ரசிக்க விட்டாலும், வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தொலை துாரத்தில் காணப்படும் இந்த அருவிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை