சேதமடைந்த கம்மாத்தி புத்துார்வயல் சாலை: அவதிப்படும் உள்ளூர் மக்கள்
கூடலுார்: 'கூடலுார் ஸ்ரீமதுரை பகுதியில் சேதமடைந்துள்ள, புத்துார்வயல் கம்மாத்தி சாலையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.கூடலுார் மண்வயல் சாலையில் கம்மாத்தி சந்திப்பு பகுதியில் இருந்து, புத்துார் வயல் இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. 1.5 கி.மீ., துாரமுள்ள இச்சாலை புத்துார்வயல் மற்றும் கூடலுார் வந்து செல்ல மாற்று பாதையாக உள்ளது.மேலும், புத்துார்வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இச்சாலை வழியாக, குங்கூர்மூலா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். சில ஆண்டுகளுக்குமுன் சீரமைக்கப்பட்டஇச்சாலை தொடர்ந்துசேதமடைந்தது. அதனை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையில், சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி, மக்கள் நடந்து செல்லவும் வாகன போக்குவரத்துக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் கூறுகையில்,'அரசு அதிகாரிகள் இந்த சேதமடைந்த சாலையை ஆய்வு செய்து, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.