அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோத்தகிரி; கோத்தகிரி கடை வீதி அழகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த, 31ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.பூ குண்டம் விழாவை முன்னிட்டு, உபயதாரர்களின் பங்களிப்புடன், நாள்தோறும் அம்மனுக்கு, ஆராதனை, அபிஷேகம், மலர் அலங்கார வழிபாடு நடந்து வருகிறது. இவ்விழாவின், 5ம் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அவதரித்த அம்மனுக்கு, அபிஷேக பூஜையும், பகல், 12:00 மணிக்கு, அலங்கார ஆராதனை பூஜையும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோத்தகிரி வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.