மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
22 hour(s) ago
கோத்தகிரி : கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஆதிவாசி பலியானார். நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்தில் பங்களபடிகை ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(28) என்பவர் நேற்று முன்தினம் கரிக்கையூரில் இருந்து பங்களபடிகை கிராமத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, சாலையோரத்தில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவக்குமாருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று உதவி வனப்பாதுகாவலர் ஜெயராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, உடனடி நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
22 hour(s) ago