யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்
பந்தலுார் ; பந்தலுார் அருகே யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் மரணமடைந்தார்.பந்தலுார் 'இன்கோ' நகரை சேர்ந்தவர் கணேசன்,60. இவர் கடந்த, 6-ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டிய, புதர் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த யானை, அவரை தாக்கியதில் காயமடைந்தார். வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.