உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூர்: குன்னூர் ஊட்டி சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே மரம் விழுந்ததில் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் --ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே கடந்த 29ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், கற்பூர மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. தகவலின் பேரில், குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி ஒரு வழியில் வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் உதவியுடன், நேற்று முன்தினம் காலை 7:00 மணி வரை போராடி, முழுமையாக மரம் அகற்றப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் வாகனங்கள் ஓட்டுபட்டறை வழியாக திருப்பி விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை