மேலும் செய்திகள்
மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை
05-Jun-2025
கூடலுார்; முதுமலை கார்குடி பிதுரல்லா பாலம் அருகே, பெண் காட்டு யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வனச்சரகம், பிதுரல்லா பாலம் அருகே, மாயாறு ஆற்றின் கரையை ஒட்டி நேற்றுபெண் யானை இறந்து கிடந்தது. முதுமலை துணை இயக்குனர் (பொ) வெங்கடேஷ்பிரபு, வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 25 முதல் 30 வயது இருக்கும். மற்றொரு காட்டு யானை தாக்கியதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளது. மேலும், தடவியல் ஆய்வுக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின்பு இறப்பதற்கு வேறு காரணம் இருப்பின் தெரிய வரும்,' என்றனர்.
05-Jun-2025