உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கபடி போட்டியில் அரசு பள்ளி வெற்றி

கபடி போட்டியில் அரசு பள்ளி வெற்றி

கோத்தகிரி; கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை அரசு உயர்நிலைப்பள்ளி, கபடி போட்டியில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது. கோத்தகிரி சி.எஸ்.ஐ., பள்ளியில், குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே, விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இப்போட்டி தொடரில், பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி, கூக்கல்தொரை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கக்குச்சி அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு இடையே நடந்தது. போட்டியில், கூக்கல்தொரை அரசு உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இதன் மூலம், இப்பள்ளி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் சாரதா பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ