உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடிந்து விழுந்த தடுப்பு சுவர் சீரமைத்து தர வலியுறுத்தல்

இடிந்து விழுந்த தடுப்பு சுவர் சீரமைத்து தர வலியுறுத்தல்

குன்னுார் : குன்னார் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கம்பிச்சோலை இந்திரா நகரில், 3 இடங்களில் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைத்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குன்னுார் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கம்பிச்சோலை இந்திரா நகர் பகுதியில் மழையின் காரணமாக, வீடுகளின் அருகே நடைபாதையுடன் கூடிய தடுப்பு சுவர் மூன்று இடங்களில் இடிந்து விழுந்தது. மழை தீவிரமடைந்து மேலும் வீடுகளுக்கும், நடைபாதைக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ