உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

ஊட்டி; 'மாவட்டத்தில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்,' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய ஊராட்சிகளின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் வரும், 11ம் தேதி அந்தந்த ஊராட்சிகளில் காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. கிராமசபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை