கிராமங்களில் பராமரிப்பு பணி; மின் தடை பகுதிகள் அறிவிப்பு
ஊட்டி : மாதாந்திர பராமரிப்பு பணியை ஒட்டி சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் வரும், 5ம் தேதி மின் வினியோகம் இருக்காது.நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை;ஊட்டி அருகே, சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் இம்மாதம், 5ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. பராமரிப்பு பணியை ஒட்டி எச்.பி.எப்., உல்லத்தி, தாவணெ, கடசோலை, பைக்காரா, தலைக்குந்தா, மேலுார், கோழிப்பண்ணை, சோலாடா, அனுமாபுரம், கல்லட்டி, குளிச்சோலை, அத்திக்கல், சோலுார் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.