உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு: பக்தர்கள் கூட்டம்

மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு: பக்தர்கள் கூட்டம்

கோத்தகிரி,; கோத்தகிரி மாரியம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவடைந்தது.கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டல பூஜை நடந்தது. கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்கார பூஜை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு பஜனை இடம்பெற்றது. இந்நிலையில், நிறைவு நாளான நேற்று, 48வது நாள் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்கார வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகளிர் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ