சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட பணம்
பந்தலுார்: பந்தலுார் அருகே தாளூர் சோதனை சாவடியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில், 56 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. பந்தலுார் அருகே சோதனை சாவடிகளில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை ஆய்வு செய்ததில், வாகனத்தில் பயணம் செய்த குண்டல்பேட் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், 56 ஆயிரத்து 400 ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், விலை அலுவலர் மனோகர் கூடலுார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தார். உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை பெற்று கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.