மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் விதி மீறல் 169 நிறுவனங்கள் மூடல்
03-Apr-2025
குன்னுார்; மே தினத்தில், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல், பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, தொழிலாளர் நல துறை தெரிவித்துள்ளது.குன்னுார் தொழிலாளர் துறை அலுவலர்கள், 'குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள்,' என, மொத்தம், 52 நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகேசன் கூறுகையில்,''மே விடுமுறை தினத்தில் பணியாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ முறையாக, அளிக்காமல் பணிக்கு அமர்த்திய, 30 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்ட விதிகள் கீழ் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
03-Apr-2025