உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி : பா.ஜ., தேசிய கொடி பேரணி

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி : பா.ஜ., தேசிய கொடி பேரணி

ஊட்டி: 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில் நம் நாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட பா.ஜ., சார்பில், ஊட்டியில் தேசியக்கொடி பேரணி நடந்தது. சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள், 26 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதனை தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களை, இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தது. அதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், நீலகிரி மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் தருமன் தலைமையில், ஊட்டியில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது. இந்த பேரணி ஏ.டி.சி., யில் துவங்கி சேரிங்கிராஸ் வரை சென்றது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை