உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் அபாயம்

தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் அபாயம்

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் மேக மூட்டமான காலநிலை நிலவுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இத்தொழிலை நம்பியுள்ளனர். தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 25 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இடுப்பொருள்களில் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்ந்துள்ளதால், தற்போது கிடைத்து வரும் விலை போதுமானதாக இல்லை. இருப்பினும், விவசாயிகள், தோட்டங்களை சிரமப்பட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாவட்டத்தில் மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மழையுடன் போதிய சூரிய வெளிச்சம் இருந்தால், பசுந்தேயிலை அரும்பு துளிர்விட்டு, மகசூல் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆனால், தற்போது, மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ