உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி

தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பல்வேறு திட்டங்களின் கீழ், 2023-24 மற்றும் 2024--25ம் நிதியாண்டில், 5,053 பயனாளிகளுக்கு, 6.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பல்வேறு திட்டங்களின் கீழ் வழக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்த விபரம்:நீலகிரி தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில், 2023-24 நிதியாண்டில், இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ், 1,000 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 80 லட்சம் ரூபாய், 2024--25ம் நிதியாண்டில், 500 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ், 2023-24 நிதியாண்டில், 1,311 பயனாளிகளுக்கு, 2.16 கோடி ரூபாய், 2024--25ம் நிதியாண்டில், 2,100 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் 2.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பயிற்சி, மண்வாசம் மேம்பாடு, டாலமைன், தோட்ட செயல்விளக்க மானியம், அங்கக இயற்கை உரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், 2023--24 மற்றும் 2024--25ம் நிதியாண்டில், மொத்தம், 132 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், 94.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், '2023--24 நிதியாண்டில், 2,379 பயனாளிகளுக்கு, 3.58 கோடி ரூபாய், 20௨4--25ம் நிதியாண்டில், 2,674 பயனாளிகளுக்கு, 3.21 கோடி ரூபாய்,' என, மொத்தம், 6.79 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை