உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பெரம்பலுாரில் விவசாயிகள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலுாரில் விவசாயிகள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலுார்:மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40வது ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு சங்கத்தின் மாநில செயலர் ராஜாசிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும்; வீட்டு மின் இணைப்புக்கு மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.பெரம்பலுார் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மக்காச்சோளம், பருத்தி.சின்னவெங்காயம், மரவள்ளி கிழங்கு, நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு முறையாக கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் முக்காடு போட்டும், மழையால் சேதமடைந்த பயிர்களை மாலையாக அணிந்தும், நேற்று நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை