சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 40 ஆண்டு
பெரம்பலுார்,:பெரம்பலுார் மாவட்டம், கை.களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 27. இவர், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி, 2019 ஏப்., 18ல் அவரது வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார். இதில், சிறுமி கருவுற்றார். சிறுமி தந்தை புகாரில், பெரம்பலுார் போலீசார் வேல்முருகனை போக்சோவில் கைது செய்தனர்.பெரம்பலுார் மகிளா நீதிமன்ற நீதிபதி, வேல்முருகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.