உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / விராலிமலை பாதையில் சுவாமி சிலைகள் உடைப்பு

விராலிமலை பாதையில் சுவாமி சிலைகள் உடைப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வும்., முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முயற்சியால், மலை மீது தார் சாலை அமைக்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில், சிவபெருமான், விநாயகர், அறுபடை வீடுகளின் முருகன், மான், சிங்கம், குரங்கு போன்ற சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டு அழகாக காட்சியளித்தன. இந்த சிலைகள், சமூக விரோதிகளால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. இது, நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன் இது போன்ற சம்பவம் நடைபெற்று புகார் அளித்தும், மீண்டும் அதே போல நடந்து உள்ளது. விராலிமலை கோவில் மலைப்பாதையில், போலீசார் ரோந்து செல்ல வேண்டும். சிலைகள் அருகில் விஷமிகள் செல்ல முடியாதபடி, தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கோவிலில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 21, 2024 20:27

சிறுவாச்சூர்லயும் ஒரு இந்து திராவிடந்தான் உடைச்சான். இங்கேயும் அவனை மாதிரி ஒரு திருட்டு திராவிடன் தான் தண்ணியடிக்க, கஞ்சா வலிக்க காசில்லாமல் சிலைகளை உடைச்சிருப்பான்.