உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்ததால் நடவடிக்கை

கடலில் லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்ததால் நடவடிக்கை

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்த ஏழு லைட்டுகள், ஜெனரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தொண்டி பகுதியில் சில நாட்டுப்படகு மீனவர்கள் இரவில் கடலுக்குள் சென்று அதிக ஒளி கொண்ட லைட் வெளிச்சத்தில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஜெனரேட்டர் வசதியுடன் ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கம்பங்களில் அதிக வெளிச்சமுள்ள பல்புகளை கட்டி வெளிச்சத்தை காட்டுகின்றனர்.முரல், நண்டு, கணவாய் உள்ளிட்ட பல வகை மீன்கள் லைட் வெளிச்சத்தை பார்த்தவுடன் மொத்தமாக கடல் நீர்மட்டத்திற்கு மேலே வரும். அப்போது வலையை விரித்து மொத்தமாக பிடிக்கும் போது அதிக லாபம் கிடைப்பதால் சில மீனவர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடலோர காவல் குழும அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., குருநாதன், மீன்வளத்துறை மேற்பார்வையாளர் கணேஷ்குமார் ஆகியோர் புதுக்குடி கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது லைட் வெளிச்சத்தில் மீன்பிடித்த மீனவர்கள் ராமகிருஷ்ணன், பஞ்சாட்சரம், சுப்பிரமணியன், மணி ஆகியோரின் படகுகளில் இருந்த 7 லைட்டுகள் மற்றும் ஜெனரேட்டர்களை பறிமுதல் செய்தனர்.இனிவரும் நாட்களில் தொடர்ந்து இதுபோல் மீன் பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை