உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி கோயில்களில் சித்திரை புத்தாண்டு தரிசனம்

பரமக்குடி கோயில்களில் சித்திரை புத்தாண்டு தரிசனம்

பரமக்குடி, - பரமக்குடியில் உள்ள கோயில்களில் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை நடந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பாடப்பட்டது. பெருமாள் ஏகாந்த சேவையில் அருள்பாலித்தார்.*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளினார்.*பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் விசு புண்யகால உற்ஸவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு அய்யன் சர்வ அலங்காரத்துடன் திருவீதி வலம் வந்தார்.அதேபோல் அனைத்து கோயில்களும் மக்கள் திரளாக தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ