உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வாகன ஓட்டிகள் திணறல்; ரோட்டோரங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு;

 வாகன ஓட்டிகள் திணறல்; ரோட்டோரங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு;

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகரில் சாலைத்தெரு, வண்டிக்காரத் தெரு, தலைமை தபால் நிலையம் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டோரம் மக்கள் நடை பாதைகள் ஆக்கிரமித்துள்ளனர். கடைகள், வணிக வளாத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகனங்களை ரோட்டில் கண்டபடி நிறுத்துவதால் தினமும் போக்குவரத்து நெரிசலி சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் அரண்மனை ரோடு, தலைமை தபால்நிலையம் ரோடு, வண்டிக்காரத்தெருவில் நகராட்சி, தாலுகா, பத்திரப்பதிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், உள்ளிட்டவைகள் உள்ளன. மேலும் பஜார் பகுதியாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வாகனங்களில் மக்கள் அதிகளவில் வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. சில கடைக்காரர்கள் முழுமையாக கம்பி வைத்தும், கட்டடம் அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் வணிக வளாகங்கள், ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்துகின்றனர். அரண்மனை ரோடு, தலைமை தபால்நிலையம், வண்டிக்காரத் தெரு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதே போல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோடு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும். மேலும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதியை உறுதி செய்ய கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ