மேலும் செய்திகள்
'பஸ் ஸ்டாண்டில் மினி பஸ்கள் தாறுமாறு'
06-Aug-2024
பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்கள் நிற்கும் இடத்தில் டூவீலர்களை நிறுத்தி வைப்பதால் டிரைவர்கள், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் தினமும் நுாறுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்படி மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்கு சில ரேக்குகள் உள்ளன.டவுன் பஸ் உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்த இட வசதி கிடையாது. இதனால் ஒவ்வொரு முறை பஸ்கள் வரும் போதும் பயணிகள் பஸ்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிச் சென்று ஏறும் நிலை உள்ளது. இந்நிலையில் மதுரை, ராமேஸ்வரம் பஸ்கள் நிறுத்தும் இடங்களிலும் டூவீலர்களை நிறுத்தி வைப்பதுடன், சிறு வியாபாரிகள் கடைகளை விரித்து ஆக்கிரமிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் பஸ்களில் ஏற முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் அதிகமான உடைமைகளை கொண்டு செல்வோர் மற்றும் குழந்தைகளை வைத்து பஸ்சில் ஏறுவோர் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. பஸ்களை குறிப்பிட்ட நேரம் நிறுத்தும் நிலையில் ரேக்குகளில் இடம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் பஸ்களால் நாள் முழுவதும் நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படுத்துவதுடன் பஸ்களை அதற்குரிய இடங்களில் நிறுத்த போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Aug-2024