பொதுவினியோக குறைதீர் முகாம்: இன்று நடக்கிறது இன்று நடக்கிறது
திருவாடானை : திருவாடானை அருகே கல்லுாரில் இன்று (மார்ச் 8) பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வகையில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இது குறித்து திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது:திருவாடானை தாலுகா கல்லுார் கிராமத்தில் சிறப்பு குறைதீர் முகாம் இன்று (மார்ச் 8) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பொது வினியோகத்தில் ஏற்படும் குறைகளை குறிப்பிட்டு மனுக்களாக கொடுக்கலாம். பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் செய்வது, அலைபேசி எண் மாற்றுதல், குடும்பதலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என்றனர்.