உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகூர்த்த தினம் எதிரொலி நகரில் போக்குவரத்து நெரிசல்

முகூர்த்த தினம் எதிரொலி நகரில் போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முகூர்த்த நாட்களில் பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, வழிவிடு முருகன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் வணிக நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், ஓட்டல்கள் நிறைய உள்ளன. பஸ் ஸ்டாண்ட் -அருகே கேணிக்கரை ரோட்டிலுள்ள வழிவிடு முருகன் கோயிலில் நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு ஏராளமான திருமணங்கள் நடந்தன. அப்போது ரோட்டோரத்தில் டூவீலர்கள், ஆட்டோ, கார்களை கண்டபடி நிறுத்தினர். இதே போல மருத்துவமனை ரோட்டிலும் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினர்.இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். முகூர்த்த நாட்களில் வழிவிடுமுருகன் கோயில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்தை முறைப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்க எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை