அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம் களை கட்டிய கிராமங்கள்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி சண்முகவேல் பட்டிணத்தில் சமயபுரத்து முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது.செப்.1ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. நேர்த்திக்கடன் பக்தர்களால் மாவிளக்கு எடுக்கப்பட்டது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகவேல் பட்டிணம் கடற்கரையில் நேற்று மாலை 5:00 மணிக்கு பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை சண்முகவேல் பட்டிணம் கிராம மக்கள் செய்திருந்தனர்.* களிமண்குண்டு ஊராட்சி மாரிவலசை காந்தாரி அம்மனுக்கு முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் காந்தாரியம்மன், மகாகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பக்தர்கள் வலம் வந்தனர். ஏற்பாடுகளை மாரிவலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.* திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொத்தி வலசையில் முத்துமாரியம்மன்கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. செப்.1ல் காப்பு கட்டுதலுடன்விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலையில் அம்மன் கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து குண்டூரணியில் கங்கை சேர்த்தனர்.