உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வலையில் சிக்கிய 2 ஆமைகள் உயிருடன் கடலில் விடப்பட்டன

வலையில் சிக்கிய 2 ஆமைகள் உயிருடன் கடலில் விடப்பட்டன

திருவாடானை : தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 2 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டன. தொண்டி அருகே சோலியக்குடி லாஞ்சியடியை சேர்ந்தவர் ராமகண்ணன். இவரது விசைபடகில் சிவபாலன், ஜெயகணேஷ், பூமிநாதன் ஆகியோர் நேற்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 50 கிலோ அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இதே போல் அதே பகுதியை சேர்ந்த தொண்டிராஜ் படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் வலையில் 350 கிலோ எடையுள்ள ஆமை சிக்கியது. இது குறித்து மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர்.போலீசார் ஆமையை உயிருடன் கடலில் விட அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து ஆமையை வலையிலிருந்து எடுத்து உயிருடன் கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆமையை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம். தற் போது வலையில் சிக்கிய இரண்டு ஆமைகளும் பேராமை வகையை சேர்ந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை