ராமேஸ்வரம் அருகே பஸ் கவிழ்ந்து ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம்
ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆந்திரா பக்தர்களின் பஸ் கவிழ்ந்து 6 பேர் காயமடைந்தனர்.ஆந்திரா குண்டூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 55 பேர் தனியார் பஸ்சில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். நேற்று முன் தினம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அவர்கள் தரிசனம் செய்தனர். நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டனர். காலை 7:45 மணிக்கு மண்டபம் காந்தி நகரில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. டிரைவர், பக்தர்கள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கவிழ்ந்த பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.பக்தர்கள் புகார் தரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.