உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் 64 மி.மீ., மழை  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர் 

ராமநாதபுரத்தில் 64 மி.மீ., மழை  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர் 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் முதல் நேற்று காலை வரை 64மி.மீ., மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையை நம்பி விவசாயிகள் நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று முன் தினம் காலை 6:00 முதல் நேற்று காலை 6:00 மணி வரை ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 64 மி.மீ., மழை பெய்துள்ளது.அதற்கு அடுத்தபடியாக கடலாடியில் 40 மி.மீ., தொண்டியில் 29.60, ஆர்.எஸ்.மங்கலம் 16, தங்கச்சிமடம் 14, முதுகுளத்துார் 13.20, பரமக்குடி 11.40, மண்டபம் 11, கமுதி 8.20, பாம்பன் 3.60, ராமேஸ்வரம் 2 மி.மீ., என மழை பொழிவு இருந்தது.இதையடுத்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.பருவ காலம் முறையாக கை கொடுத்தால் மட்டுமே நெற்பயிர்கள் விளைந்து பயன் கொடுக்கும். நிலத்தடி நீர் மேம்படவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ