உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 71 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்

71 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்

ராமநாதபுரம்:-தமிழகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி மாமுனை பகுதிக்கு கடத்திவரப்பட்ட 71 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலில் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள மாமுனை பகுதியில் இலங்கை கடற்படையினர், மருதங்கேணி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 38 பண்டல்களில் இருந்த 71 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இருந்து கடல்வழியாக அதை கடத்தி வந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். கஞ்சா மதிப்பு ரூ.21 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இலங்கை வெண்ணப்புவ, போலவத்த பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சோதனையிட்டதில் காரில் கடத்த முயன்ற 900 கிலோ கஞ்சா , இரு வெளிநாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். --------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி