உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதருக்குள் கிடந்த கோயில் உண்டியல்

புதருக்குள் கிடந்த கோயில் உண்டியல்

திருவாடானை: திருவாடானை மங்களநாதன் குளம் அருகே சித்தர் பீடம் உள்ளது. இங்குள்ள உண்டியலை யாரோ எடுத்து அருகில் உள்ள கால்வாய் புதருக்குள் போட்டனர். நேற்று முன்தினம் அந்தப் பக்கமாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர். திருவாடானை போலீசார் உண்டியலை கைப்பற்றி விசாரித்தனர். உண்டியலை எடுத்த திருடர்கள் பணம் இல்லாததால் புதருக்குள் துாக்கி வீசியுள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ