மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
05-Jul-2025
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் மென்னந்தி ஊராட்சி அரசநகரி கிராமத்தில் கலைச்செல்வி அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடந்தது. ஜூலை 18 காலை விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. அன்று இரவு காப்பு கட்டப்பட்டு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஜூலை 22ல் 108 திருவிளக்கு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. ஜூலை 25 கரகம் எடுத்தல், உற்சவர் அம்மன் வீதி உலா வந்து பெண்கள் பூக்கூடை ஏந்தி சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை பொங்கல் விழாவும், அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர் கண்ணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
05-Jul-2025