மாணவர்களுக்கு பாராட்டு
கீழக்கரை : முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அள விலான சிலம்பப் போட்டியில் கீழக்கரை ஆர்.கே.ஈசன் சிலம்பம் பவுண்டேஷன் பள்ளியில் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 75 கிலோ எடை பிரிவில் மோகித் சரண் தங்கப்பதக்கம், கபிலீஸ் சரண் வெண்கல பதக்கமும், 75 கிலோவிற்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீ பத்மப்பிரியன் வெண்கல பதக்கம் வென்றனர். சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் மோகித் சரண் உள்ளிட்ட மாணவர்களை ஆர்.கே.ஈசன் சிலம்பம் பவுண்டேஷனின் நிர் வாகிகள் பாராட்டி கவுரவித்தனர். சமீபத்தில் நடந்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி யில் கீழக்கரை குறு வட்டார அளவிலான சிலம்பப் போட்டி யில் 13 மாணவர்கள் முதல் பரிசும், 6 பேர் 2ம் பரிசும், 9 பேர் 3ம் பரிசும் பெற்று பெருமை சேர்த்தனர்.