உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பீடி இலைகள் இலங்கையில் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பீடி இலைகள் இலங்கையில் பறிமுதல்

ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து இலங்கை புத்தளம் பாலாவி பகுதிக்கு கடத்தி சென்ற ரூ.75 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.இலங்கை புத்தளம் மாவட்டம் தம்பபண்ணி கடற்படையினருக்கு பீடி இலைகள் லாரியில் கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து லாரியை தடுத்து நிறுத்த முயன்ற போது அதை நிறுத்திவிட்டு இருவர் தப்பிச்சென்றனர்.பின்னர் லாரியை சோதனையிட்டபோது 60 மூடைகளில் 1535 கிலோ பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்களையும் லாரியையும் பறிமுதல் செய்து புத்தளம் கலால் வரித்துறையிடம் ஒப்படைத்தனர். அவைசட்டவிரோதமாக தமிழகத்தில் இருந்து கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டு பின்னர் லாரிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேல்விசாரணை நடக்கிறது. --------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ