உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொச்சியில் மூழ்கிய கப்பல் மாலுமி உடல் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியது

கொச்சியில் மூழ்கிய கப்பல் மாலுமி உடல் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம்: கொச்சியில் மூழ்கிய சரக்கு கப்பலில் வந்த மாலுமி உடல் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொட்கள் 50 மூடை தனுஷ்கோடியில் கரை ஒதுங்கின. நேற்று தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் 50க்கு மேலான மூடைகள் கரை ஒதுங்கி கிடந்தன. மரைன் எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் சோதனையிட்டனர்.தலா 25 கிலோ உள்ள இந்த மூடைகள் அரபு எமிரேட் நாடுகளில் தயாரிக்கப்பட்டு உள்ளது. உள்ளே ஜவ்வரிசி வடிவில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இருந்தது.மேலும் சில மூடைகள் உடைந்து 5 கி.மீ., வரை கடற்கரையில் பரவி கிடந்தது. இவை பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படக்கூடியது என தெரிந்தது.மே 24ல் லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி., எல்சா எனும் சரக்கு கப்பல் 640 கன்டெய்னர்களுடன் கொச்சி அருகே கடலில் மூழ்கியது. இதனுள் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் உள்ள மூடைகள் இருந்துள்ளன. இதில் பிளாஸ்டிக் மூலப் பொருள்களின் மூடைகள் இங்கு ஒதுங்கியுள்ளது. கப்பலில் வந்த ஒரு மாலுமியின் அழுகிய உடலும் கரை ஒதுங்கியது. மேலும் பல மூடைகள் உடைந்து பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கடலில் மிதக்கின்றன. இதனை மீன்கள் உட்கொண்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை